/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை
ADDED : ஆக 26, 2025 11:28 PM

ஊட்டி; குன்னுார் அருகே வசித்து வரும் தம்பதியின், 10 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்,35, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, 2023ம் ஆண்டு டிச., 12ம் தேதி ரவிசந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ரவிச்சந்திரனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 10,500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.