sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்

/

கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்

கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்

கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்


ADDED : மார் 01, 2024 09:59 PM

Google News

ADDED : மார் 01, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை திறக்க கையெழுத்து இயக்கம் நடந்தது.

பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிக்கு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடம் திறக்கப்படாமல் தற்போது பாழடைந்து புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

'கட்டடம் முழுமையாக பாதிக்கப்படும் முன்னர் திறந்து செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலுார் ஏரியா கமிட்டி சார்பில், கவனஈர்ப்பு கையெழுத்து இயக்கம் தேவாலா பஜாரில் நடந்தது. ஏரியா கமிட்டி செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தலைவர் மணிகண்டன் துவக்கி வைத்தார். துணை தலைவர் ஹசைன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், வாலிபர் சங்க பொருளாளர் செரீப், தேவாலா கிளை செயலாளர் ஷாஜி, ரெஜிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us