sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது

/

அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது

அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது

அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது


ADDED : பிப் 16, 2025 11:13 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,; கூடலுார் தொரப்பள்ளியில் நடந்த சோதனை பணியின் போது, கர்நாடக அரசு பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை கொண்டு வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் இருந்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு பஸ்களிலும் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், கேரளா அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

இந்நிலையில், கூடலுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, எஸ்.ஐ., கவியரசு மற்றும் போலீசார் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். அதில், கர்நாடகா அரசு பஸ்சில் சோதனை மேற்கொண்ட போது, ரெஜித், 26; முகமது அப்துல் நயிம்,46; கோப்பம்மா, 40; தேவிரா,40; லிங்க ராஜம்மா, 42; மகாதேவம்மா,49, ஆகியோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட, 80 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும். இதில், ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us