/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நான்கு ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவங்கியது வரும் 15ல் கிராம சபை கூட்டம்
/
நான்கு ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவங்கியது வரும் 15ல் கிராம சபை கூட்டம்
நான்கு ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவங்கியது வரும் 15ல் கிராம சபை கூட்டம்
நான்கு ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவங்கியது வரும் 15ல் கிராம சபை கூட்டம்
ADDED : மார் 12, 2024 01:05 AM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில், நேற்று சமூகத் தணிக்கை துவங்கியது. வரும் 15 ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும், குளம், குட்டை தூர் வாருதல், சங்கன் பாண்டு அமைத்தல், மரக்கன்று நடுதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் ஆகிய பணிகள் நடக்கிறது.
பணிகள் சரியாக நடைபெற்றுள்ளனவா என ஒவ்வொரு ஆண்டும், வெளி தணிக்கையாளர்கள் மூலம் அளவீடு செய்யும் பணி நடக்கிறது.
பசூர், பொகலூர், வடக்கலூர், பிள்ளையப்பம் பாளையம், ஆகிய நான்கு ஊராட்சிகளில், 2022 ஏப்., 1ம் தேதி முதல், 2023 மார்ச் 31ம் தேதி வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் நேற்று சமூக தணிக்கை செய்யும் பணியை துவக்கினர்.
இத்திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை அளவீடு செய்து வருகின்றனர். சொத்துக்கள் உண்மையிலேயே உருவாக்கப்பட்டுள்ளனவா, தொழிலாளிகளுக்கு சம்பளம் ஆவணங்களில் உள்ளபடி வழங்கப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து வருகின்றனர்.
வரும் 14ம் தேதிவரை சமூக தணிக்கை நடக்கிறது.
இதில் கண்டறியப்படும் குறைகள் குறித்து சமூக தணிக்கை அறிக்கை வரும் 15ம் தேதி நான்கு ஊராட்சிகளிலும், காலை 11:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கப்படும். பொதுமக்கள் கடந்த ஓராண்டில் எவ்வளவு பணிகள் செய்யப்பட்டன.
எவ்வளவு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. என்னென்ன சொத்துக்கள் உருவாக்கப்பட்டன. இதில் குறைகள் கண்டறியப்பட்டுள்ளனவா என கூட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

