/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென் மாநில தேயிலை ஏலம் ரூ. 29.30 கோடி வருவாய்
/
தென் மாநில தேயிலை ஏலம் ரூ. 29.30 கோடி வருவாய்
ADDED : ஏப் 15, 2025 09:09 PM
குன்னுார், ; தென் மாநிலத்தில் உள்ள, 3 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 29.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 15வது ஏலத்தில், '9.91 லட்சம் கிலோ இலை ரகம்; 2.79 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 12.70 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
அதில், '9.07 லட்சம் கிலோ இலை ரகம்; 2.55 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 11.62 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 92 ஆயிரத்து 650 கிலோ வரத்து குறைந்தது.
1.38 லட்சம் கிலோ விற்பனை குறைந்தது; 91.47 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 123.02 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 14.30 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில், 1.98 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
'டீசர்வ்' மைய ஏலம்
நீலகிரி மாவட்டம், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 15வது ஏலத்திற்கு, 1.68 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. 1.51 லட்சம் கிலோ விற்றது.
சராசரி விலை கிலோவிற்கு, 109.62 ரூபாய் என இருந்தது. ஒரே வாரத்தில் கிலோவிற்கு, 3 ரூபாய் வரை குறைந்தது. 1.65 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. இரு ஏல மையங்களில் சேர்த்து, 15.95 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
கொச்சி, கோவை ஏலம்
'கொச்சி ஏல மையத்தில், 8.32 லட்சம் கிலோ வந்ததில், 8.02 லட்சம் கிலோ,' என, 96.43 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 166.24 ரூபாய் என இருந்தது.
13.35 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது; சராசரி விலையும் மொத்த வருமானமும் உயர்ந்தது. கோவை எல மையத்தில், 15 வது ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில், 3 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 29.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
கோவை ஏலம் இல்லாத நிலையில், 5 கோடி ரூபாய் வருவாய் சரிந்தது.