/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென் மாநில தேயிலை ஏலம்; ரூ.34.38 கோடி வருவாய்
/
தென் மாநில தேயிலை ஏலம்; ரூ.34.38 கோடி வருவாய்
ADDED : ஏப் 07, 2025 09:14 PM

குன்னுார்; தென் மாநிலங்களில் உள்ள, 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 34.38 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 14வது ஏலத்தில், '10.71 லட்சம் கிலோ இலை ரகம்; 2.92 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 13.63 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. இலை ரகத்தில், கடந்த ஏலத்தை விட, 2.27 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது.
ஏலத்தில், '10.47 லட்சம் கிலோ இலை ரகம்; 2.53 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 13 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 2.86 லட்சம் கிலோ வரத்து அதிகரித்ததுடன், 2.30 லட்சம் கிலோ விற்பனையும் உயர்ந்தது.
சராசரி விலை கிலோவிற்கு, 122.91 ரூபாய் என இருந்தது. விலையில், கிலோவிற்கு, 1.50 ரூபாய் உயர்ந்தது. மொத்த வருமானம், 15.98 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில், 2.98 கோடி ரூபாய் மொத்த வருமானம் உயர்ந்தது.
கூட்டுறவு தேயிலை துாள்
நீலகிரி மாவட்ட, கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 14வது ஏலத்திற்கு, 1.53 லட்சம் கிலோ வந்தது. 1.52 கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 113.05 ரூபாயாக இருந்தது. 1.72 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
இரு ஏல மையங்களில் சேர்த்து, 17.7 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
மேலும், கோவை ஏல மையத்தில், 4.42 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 3.78 லட்சம் கிலோ விற்பனையானது. 5.38 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவிற்கு, 142.27 ரூபாய் என இருந்தது.
கேரள மாநிலம் கொச்சி ஏல மையத்தில், 8.12 லட்சம் கிலோ வந்ததில், 6.74 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த வாரத்தை விட, வரத்து குறைந்த போதும் விற்பனை அதிகரித்தது.11.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. 2 கோடி ரூபாய் சரிந்தது. சராசரி விலை கிலோவிற்கு 167.49 ரூபாய் என இருந்தது.
தென் மாநிலங்களில் உள்ள, 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 34.38 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. தென் மாநில அளவில், 2.5 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்தது.