/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சிறப்பு காப்பீடு குறைத்தீர்க்கும் நாள் முகாம்; வாடிக்கையாளர்கள் பங்கேற்க அழைப்பு
/
ஊட்டியில் சிறப்பு காப்பீடு குறைத்தீர்க்கும் நாள் முகாம்; வாடிக்கையாளர்கள் பங்கேற்க அழைப்பு
ஊட்டியில் சிறப்பு காப்பீடு குறைத்தீர்க்கும் நாள் முகாம்; வாடிக்கையாளர்கள் பங்கேற்க அழைப்பு
ஊட்டியில் சிறப்பு காப்பீடு குறைத்தீர்க்கும் நாள் முகாம்; வாடிக்கையாளர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 03, 2026 06:01 AM
ஊட்டி: அஞ்சல் சிறப்பு காப்பீடு குறைத்தீர்க்கும் முகாமில், வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அஞ்சல் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, 3ம் தேதி (இன்று) சிறப்பு காப்பீடு குறைத்திருக்கும் முகாம் நடக்கிறது.
ஊட்டி தலைமை அஞ்சலகம் மற்றும் குன்னூர் தலைமை அஞ் சலகங்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், காப்பீடு தொடர்பான விண்ணப்பங்கள், அனைத்து கிளை தொடர்பான விண்ணப்பங்கள், இணைய வழி பிரீமியம் செலுத்தும் விபரங்கள், பாலிசி திருத்தம், புதுப்பிப்பு மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
எனவே, காப்பீடு வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் பங்கேற்று, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரீமியம் கட்டுதல் மற்றும் ரசீது பெறுதல் போன்ற ஆன்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகள், பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், தபால் துறையில் சேவைகளை மேலும் எளிமையாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

