sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 16, 2025 04:04 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர: மஞ்சூர் சுற்றுவட்டார கிராமங்களில் தை பண்டிகையை ஒட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மார்கழி மாதத்தை ஒட்டி கடந்த ஒரு மாதமாக அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில்களில் அதிகாலையில் மார்கழி பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்கழி மாதம் முடிந்து, தை பிறந்ததை ஒட்டி, கோவில்களில் அதிகாலையில் கணபதி பூஜையை தொடர்ந்து அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், மஞ்சூர் அருகே குந்தா துனேரி கிராமத்தில் நாராயணமூர்த்தி கோவிலில் அதிகாலையில் கணபதி பூஜையை தொடர்ந்து பஜனை நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், மஞ்சூர் மாரியம்மன் கோவில், அன்னமலை முருகன் கோவில்,கீழ்குந்தா, கரிய மலை, பாக்கோரை உள்ளிட்ட கிராமங்களில் தை முதல் நாளை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us