sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டேரி பகுதியில் காட்டெருமை சுட்டு கொல்லப்பட்ட வழக்கு முக்கிய குற்றவாளி கைது; நான்கு பேர் சரண்

/

காட்டேரி பகுதியில் காட்டெருமை சுட்டு கொல்லப்பட்ட வழக்கு முக்கிய குற்றவாளி கைது; நான்கு பேர் சரண்

காட்டேரி பகுதியில் காட்டெருமை சுட்டு கொல்லப்பட்ட வழக்கு முக்கிய குற்றவாளி கைது; நான்கு பேர் சரண்

காட்டேரி பகுதியில் காட்டெருமை சுட்டு கொல்லப்பட்ட வழக்கு முக்கிய குற்றவாளி கைது; நான்கு பேர் சரண்


ADDED : மார் 12, 2024 01:24 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:குன்னுார் அருகே காட்டேரி அணைபகுதியில், காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டேரி அணை அருகே, கடந்தாண்டு அக்., 19ல் காட்டெருமை ஒன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, டிச.,6ல் மூன்று பேரை கைது செய்தனர். மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், சிறப்பு குழு அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த சைஜூ,48, ஜூலெட்,51, ஜோஸ்குட்டி,50, குட்டிகிருஷ்ணன்,47, ஆகிய நான்கு பேர், 7ம் தேதி மாலை ஊட்டி ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர்.

இந்நிலையில், காட்டெருமையை சுட்டு கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும், முக்கிய குற்றவாளி சாஜி,54, என்பவரை நேற்று வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், கூடலுார் ஓவேலி பேரூராட்சியின் காங்., கவுன்சிலராக உள்ளார். விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us