/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
/
வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
ADDED : மார் 05, 2024 11:34 PM
ஊட்டி:வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், கடந்த சில நாட்களாக நாள்தோறும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதில், 'இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பெயர் மாற்றம் செய்யவிருந்த அரசாணையை வெளியிடவேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,' என்பன, உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்நிலையில், சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மற்றும் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது.

