ADDED : நவ 17, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர்: பந்தலூர் பகுதியில் காலை நேரத்தில், கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சூரியன் மறைந்து காணப்படுகிறது.
பந்தலூர் பகுதி கேரளா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு குளிருக்கு பதில், இதமான காலநிலை நிலவும். சமீப காலமாக கோடை வெயிலின், தாக்கம் குறைந்து, மழைப்பொழிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு, பகலில் குளிர், மாலையில் மேகமூட்டம் என, காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், சூரியன் பனிப்பொழிவுக்கு மத்தியில் மறைந்து காணப்பட்டது.
இந்த காட்சியை இந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணியர் வெகுவாக ரசித்து சென்றனர்.

