sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை

/

சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை

சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை

சாலைக்காக போராடியும் தீர்வு இல்லை பழங்குடியின மக்கள் வேதனை


ADDED : பிப் 20, 2024 06:13 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 11 வது வார்டு அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், நடைபாதைகள் சேதமடைந்து உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில், கடலக்கொல்லி, மாங்கம்வயல் செல்லும் மண் சாலையை சீரமைக்க, கிராம மக்கள், வார்டு உறுப்பினர் தொடர்ந்து மனுப்போர் நடத்தி வந்த நிலையில், கடந்த, 2021ல் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 24 லட்சம் ரூபாய் செலவில், மண் சாலை 'சோளிங்' சாலையாக மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது கற்கள் முழுமையாக பெயர்ந்து, நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லாத நிலையில், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே, இப்பகுதி மக்கள் வெளியில் சென்று வருகின்றனர்.

வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், 700 மீட்டர் துாரமுள்ள மேட்டுப்பாங்கான சாலையில் நடந்தே வருகின்றனர். தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டி, 50 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் இவர்களை புறக்கணித்து வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us