sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

/

நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

5


UPDATED : பிப் 28, 2025 02:21 PM

ADDED : பிப் 28, 2025 02:20 PM

Google News

UPDATED : பிப் 28, 2025 02:21 PM ADDED : பிப் 28, 2025 02:20 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: கேரளாவின் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பழசி ராஜா, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரின் போது தங்கியிருந்த குகை ஒன்று நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.Image 1386323

கேரளாவின் கோட்டயம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக, கடந்த 1753ல் ஆட்சி புரிந்தவர் பழசி ராஜா. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை, நெலாக்கோட்டை, ஸ்ரீ மதுரை, சேரம்பாடி மற்றும் மசினகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டயம் மண்டலமாக இருந்தது. ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால், மக்கள் இவருக்கு ஆதரவு அளித்தனர்.Image 1386324

ஆங்கிலேயப் படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்த போது, அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார். 1799-ல் வயநாடு பகுதிகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். தொடர்ந்து பழசிராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்தார். மேலும் குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைது, ஆங்கிலேயருக்கு எதிராக போரில் பங்கேற்றார்.

அப்போது குறும்பா, பனியா பழங்குடியின மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களை தயார்படுத்தி கொடுத்தனர். குறும்பா பழங்குடியின மக்கள் வில், ஆம்பு போன்ற ஆயுதங்களை போரில் பயன்படுத்தினார்கள். மேலும் வயநாடு மற்றும் நீலகிரி மலைகளில் அதிக அளவில் தங்களுக்கான தளங்களை ஏற்படுத்தினார். அதில் பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நெலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து, அதில் தனது படைகளுடன் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்தவர் பழசி ராஜா.

Image 1386325அதில் ஒரு குகை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் வெண்ட்வொர்த் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே, சிறிய குழியாக காணப்பட்ட பகுதியை சீரமைத்து பார்த்ததுடன், வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்ததில், அது பழசி ராஜா தங்கியிருந்த குகை என்பது தெரிய வந்தது. இந்த குகை சுமார் 30 மீட்டர் தூரம் சென்றதும், பிரிந்து இரண்டு பாதைகளாக செல்கிறது. தற்போது குகையின் உள்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டு உள்ளது.

Image 1386326இந்த குகையினை தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பழசி ராஜாவின் 6-வது தலைமுறையை சேர்ந்த கொச்சு தம்புராட்டி சுபா வர்மா, அவரது கணவர் டாக்டர் கிஷோர் திறந்து வைத்து, பழசி ராஜாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் மன்னர் வாரிசுகளுக்கு பசுந்தேயிலை மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர்களின் மூதாதையர்களை நினைவு கூர்ந்து, அந்தப் பகுதிகளை பார்வையிட்டனர். இந்த குகை 1791 -1801ம் ஆண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டு, கொரில்லா போர் தளமாக செயல்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிப்பதாகவும்,இந்த பகுதியை இனி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்றும் முறையாக இந்த குகை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டதாகவும் எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Image 1386327மேலும் போரின்போது வில் அம்புபுடன் போரில் பங்கேற்ற குரும்பா சமுதாயத்தை சார்ந்த கோவிந்தன் ஆசாரி, போரில் தனது தாத்தா பயன்படுத்திய வில் அம்புடன் பங்கேற்றார். அதேபோல் பழசி ராஜாவின் உருவத்தை உருவாக்கிய சிற்பி பினு ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

Image 1386328இதுகுறித்து சுபா வர்மா கூறுகையில், எங்களின் மூதாதையரான பழசிராஜா சுமார் 31 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் போரிட்டார். அவர் தேசத்திற்காக வனங்களில் தங்கியிருந்து போராடிய இடத்தையும், அவர் தனது படை வீரர்களுடன் தங்கி இருந்த குகையையும் பார்க்க முடிந்தது பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.

இது போன்ற வரலாற்று சுவடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெளிப்படுத்துவதுடன் நமது முன்னோர்களான போர் வீரர்களுக்கு மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் உதவி செய்தது குறித்து தெரிந்து கொள்ள செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும் என்றார்.






      Dinamalar
      Follow us