/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
/
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 12, 2024 09:45 PM
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள், ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களை ரசிக்க திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இருந்த போதிலும் வெம்மை ஆடைகளை அணிந்து பயணிகள் தாவரவியல் பூங்காவை ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால், சுற்றுலா பயணியர் வருகை குறைந்த போதிலும், பூங்காவுக்கு ஏராளமான கேரளா சுற்றுலா பயணிகள்; மாணவ, மாணவியர் வந்திருந்தனர்.
அவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு குடும்பத்தார், நண்பர்களுடன் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியர் முகப்பு புல்தரையில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.