ADDED : ஆக 26, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:
குன்னூர் ஊட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே நேற்று காலை 6:15 மணியளவில் திடீரென ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அவ்வழியே சென்ற பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மரத்தை பவர்ஷா உதவியுடன் அறுத்து சாலையில் விழுந்த மரக்கிளைகளை துரிதமாக அப்புறப்படுத்தினர்.
சுமார் இரண்டு மணி நேர தீவிர முயற்சிக்குப்பின், மரம் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
