sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மணி கூண்டில் போக்குவரத்து போலீசாரின் அறை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுது

/

மணி கூண்டில் போக்குவரத்து போலீசாரின் அறை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுது

மணி கூண்டில் போக்குவரத்து போலீசாரின் அறை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுது

மணி கூண்டில் போக்குவரத்து போலீசாரின் அறை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுது


ADDED : பிப் 06, 2025 08:27 PM

Google News

ADDED : பிப் 06, 2025 08:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி மணிக்கூண்டில் போலீசாரின் கண்காணிப்பு அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

ஊட்டி மார்க்கெட் எதிரே மணிக்கூண்டு பகுதியில், 'லோயர் பஜார் சாலை, ஏ.டி.சி., சாலை, கமர்ஷியல் சாலை,' என, முக்கிய சாலைகள் உள்ளன. இங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு அத்தியாவசிய தேவைக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள மணிக்கூண்டில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு அறை உள்ளது. இந்த அறையில் போக்குவரத்து போலீசார் உடமைகள் வைக்கவும், அவ்வப்போது அமரவும் இருக்கை இருந்தது.

சமீப காலமாக இந்த கண்காணிப்பு அறையில் பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவில் சிலர் இங்கு அமர்வதால், சிக்னல் உபகரணங்கள் அனைத்தும் உடைந்துள்ளது. இருக்கைகளை காணவில்லை.

போக்குவரத்து போலீசார் கடும் வெயிலில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு அறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us