ADDED : ஜூன் 19, 2026 03:25 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் பாடந்துறையில், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில், வேளாண் தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
உதவி திட்ட அலுவலர் ஜெகதீஸ் வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரூபினா தலைமை வகித்து, 'தேனீக்கள் வளர்ப்பு, பொருளாதார பயணங்கள்,' குறித்து விளக்கினர். முன்னோடி விவசாயி உதயகுமார், சசிதரன், 'தேன்பெட்டிகள் பொருத்தும் முறை,' குறித்து விளக்கினர்.
