sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா 1.70 லட்சம் நாற்றுக்கள் நடவு பணி துவக்கம்

/

சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா 1.70 லட்சம் நாற்றுக்கள் நடவு பணி துவக்கம்

சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா 1.70 லட்சம் நாற்றுக்கள் நடவு பணி துவக்கம்

சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா 1.70 லட்சம் நாற்றுக்கள் நடவு பணி துவக்கம்


ADDED : மார் 07, 2024 11:46 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் காட்டேரி பூங்காவில் கோடை சீசனுக்காக, 1.70 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி துவங்கியது.

குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் மலைகள் மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே, காட்டேரி பூங்கா பசுமை சூழலில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

பூங்காவில் ஆண்டுதோறும், மே மாதம் கோடை சீசனுக்கு மார்ச் மாதத்தில் நடவு பணி நேற்று துவங்கியது.

நீலகிரி தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம் நடவு செய்து துவக்கி வைத்தார்.

'பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க வகை குட்டை ரக மேரிகோல்டு, பிளாக்ஸ், சூரியகாந்தி.

ஆன்டிரினம், பெட்டுனியா, பால்சம், பெகோனியா, சால்வியா, குட்டை ரக சால்வியா, ஆஸ்டர், ஜினியா, வெர்பினா மற்றும் டேலியா,' என, 30 வகையில், 1.70 லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'இந்த மலர் நாற்றுக்களின் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, கொல்கத்தா, காஷ்மீர் போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டு நாற்றுக்களாக இங்கு உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த மலர்கள் அனைத்தும் ஏப்., 3வது வாரத்தில் இருந்து பூத்து குலுங்கும். இந்த ஆண்டு. ஏப்., மே மாத கோடை சீசனுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர் (பொ), சபாரத்தினம் மற்றும் பண்ணை பணியாளர்கள் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us