/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள்
/
சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 18, 2024 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டியில் நடந்த சிறுபான்மையினர் தின விழாவில் பயனாளிகளுக்கு, 3.80 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தின விழா நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதில், 45 பயனாளிகளுக்கு, 3.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன், ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.