sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

/

சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை


ADDED : செப் 03, 2025 10:45 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடி போலீசார் தெப்பக்காடு- மசினகுடி சாலையில் கண்காணிப்பு பணிக்காக வாகனத்தில் சென்ற போது, சாலையில் நடுவே காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி வனச்சரகர் ராஜன், வானவர் சந்திரன் ராஜ், வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, அவ்வழியாக பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் இறந்த யானையின் உடல் சாலையோரம் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது.

இதை தொடர்ந்து, இறந்த காட்டு யானையின் உடலை, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த யானைக்கு, 50வயது இருக்கும். வயது முதிர்வு, உள் உறுப்பு பாதிப்பு காரணமாக இறந்துள்ளது. ஆய்வக சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின்பு, யானை இறப்புக்கு வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.

சமீப காலமாக இந்த யானை, மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடை, வீடுகளை சேதப்படுத்த வந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us