/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி
/
130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி
ADDED : ஜூலை 14, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் வாசுகி நகர் அருகே விறகு எடுக்க சென்ற பெண், 130 அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியானார்.
குன்னுார் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி மேரி ரெபோல்,56. நேற்று இவர் வாசுகி நகர் அருகே புதர்கள் நிறைந்த மலை உச்சியில் விறகு எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்து, 130 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் மீட்கப்பட்ட, பிரேத பரிசோதனைக்காக குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.