sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை

/

நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை

நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை

நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை


ADDED : டிச 15, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் அந்தோணியார் பள்ளி அரங்கில், இரண்டாம் கட்ட மகளிர் உரிமை தொகை மற்றும் அதற்கான வங்கி கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். குன்னுார், எடப்பள்ளி, உபதலை, பேரட்டி, ஜெகதளா கிராமத்தை சேர்ந்த பயனாளிக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது.

விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில்,''மகளிர் உரிமை திட்டத்தில் நீலகிரியில், முதல்கட்டமாக ஏற்கனவே, 1.14 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி சென்னையில் துவங்க தாமதம் ஆகியவிட்டதால், இங்குள்ள நிகழ்ச்சிக்கு வந்த பல மகளிர் சென்று விட்டனர்.

மகளிர் உரிமை தொகை, 2ம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில், 31 ஆயிரத்து 337 பேர் விண்ணப்பித்த நிலையில், 3,402 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். தொடர்ந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் கலெக்டர்கள் சங்கீதா (குன்னூர்), ராதாகிருஷ்ணன் (சமூக பாதுகாப்பு) முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர்கள் சுசீலா, வாணி, துணை தலைவர் வாசிம் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us