sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

 ஆம்னி பஸ் -- லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம்

/

 ஆம்னி பஸ் -- லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம்

 ஆம்னி பஸ் -- லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம்

 ஆம்னி பஸ் -- லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம்


ADDED : டிச 22, 2025 09:42 AM

Google News

ADDED : டிச 22, 2025 09:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதிய விபத்தில், லாரி டிரைவர் உட்பட, 21 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையிலிருந்து தாராபுரத்துக்கு, ராயல் ரோடு லிங்க் என்ற ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 40, ஓட்டினார். பஸ், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் தண்ணீர் பந்தல் பகுதியில் வந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு சென்று ஆம்னி பஸ் மீது மோதியது.

இதில், பஸ்சில் பயணம் செய்த, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சின்னாத்தா, 80, காந்திமதி, 60, திண்டுக்கல் மாவட்டம், குப்பமேட்டுப்பட்டி ரெங்கராஜ், 49, லாரி டிரைவரான சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி ரவிக்குமார், 43, உட்பட, 21 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலுார் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us