sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்

/

மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்

மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்

மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜன 03, 2025 03:03 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், டி.கீரனுார் பகுதியில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக நேற்று முன்தினம் இரவு மங்கலமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்கள் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கிராவல் மண் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட எறையூர் எஸ்.எல்.ஆர்., காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் கீரனுார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் உள்ளிட்ட 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த3 வாகனங்களையும் மங்கலமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

இந்த மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்று உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்வதோடு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us