/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கல் குவாரிகளில் 'ட்ரோன்' ஆய்வு
/
கல் குவாரிகளில் 'ட்ரோன்' ஆய்வு
ADDED : நவ 15, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில், 33 கல்குவாரிகளில் பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெரால்ட் மற்றும் சிறப்பு ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழு நான்கு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலம் வீடி யோ பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நவ., 11ம் தேதி துவங்கிய இந்த ஆய்வு வரும் 17ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும். ஆய்வு முடிந்ததும், விதிமீறிய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

