sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்

/

அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்

அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்

அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்


ADDED : செப் 16, 2011 12:00 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், வேப்பூர் ஒன்றிய குழு கூட்டம் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு நகர செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். பகுதிக்குழு செயலாளர் ஞானசேகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, இளமுருகு, பொன்னுசாமி, ராமராஜ், ஜீவாதங்கராசு, ஆறுமுகம், வீரமுத்து, சம்பத், தியாகராஜன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வேணுகோபால் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிடுவது. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றுவது. பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். காவிரி குடிநீர் தினமும் விநியோகம் செய்ய வேண்டும். கீழப்பெரம்பலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும். நன்னை நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பெரம்பலூரிலிருந்து எறையூர் வழியாக பெருமத்தூர் வரை இயக்கப்படும் டவுன்பஸ் வேப்பூர் வரை நீட்டிக்கப்படவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us