sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்

/

ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்

ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்

ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்


ADDED : டிச 05, 2024 11:33 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார் : ஆபத்தை அறியாமல், இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவ- - மாணவியரின் அவல நிலையைப் போக்க, மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா கூடலுார்- - கூத்துார் கிராமங்களுக்கு இடையே மருதையாறு ஓடுகிறது. இதனால், கூடலுார் பகுதி மக்கள் தங்களது அவசிய தேவைகளுக்கு ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டும்.

மேலும், நுாற்று-க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் ஒருவரை ஒருவர் கைகோர்த்து பிடித்தபடி, ஆற்றைக் கடந்துதான் கூத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதனால், பலரும் மாற்று உடையுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தண்ணீர் இல்லாத போது, மக்கள் நடந்தும், டூ--வீலர்களிலும் ஆற்றுப்படுகையைக் கடந்தும் செல்கின்றனர்.

ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது இலுப்பைக்குடி, பிலிமிசை வழியாக கூத்துாருக்கு, 7 கி.மீ., கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சோகத்தை அதிகரிக்கிறது.






      Dinamalar
      Follow us