/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஏட்டு மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ் கைது
/
ஏட்டு மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ் கைது
ADDED : பிப் 15, 2024 02:45 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றுபவர் சதீஸ்குமார், 30, ஆயுதப்படை குடியிருப்பில் பிளாக் எண் 12ல் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவரது மனைவி பிருந்தா, 24, இவர், கடந்த 12ம் தேதி இரவு 9:15 மணிக்கு, வீட்டிற்கு வெளியே மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, குடி போதையில் அங்கு வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன், 31, என்பவர், பிருந்தா வாயை பொத்தி, பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் துாக்கிச் செல்ல முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண், பிரபாகரனை தள்ளிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி, தன் கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின், பெரம்பலுார் போலீசில் பிருந்தா புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், பிரபாகரனை கைது செய்து, பெரம்பலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தார்.
போலீஸ் ஏட்டு மனைவியை, குடி போதையில் சக போலீஸ் ஒருவரே பலாத்காரம் செய்ய முயற்சித்தது, போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

