ADDED : ஜூன் 19, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டிணம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம்,150 விசைபடகுகளில் மீனவர்கள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில், கோட்டைபட்டினத்தை சேர்ந்த சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் பார்த்திபன், 32, முரளி, 42, சாரதி, 28, ராமதாஸ், 53, ஆகிய நான்கு மீனவர்களும் ஒரே படகில்நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது,அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களையும், படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். யாழ்ப்பாணம் ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி நளினிசுபாஷ்கரன், வரும் ஜூலை 2ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.