sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

திருவரங்குளம் கோவில் கோபுரம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

/

திருவரங்குளம் கோவில் கோபுரம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

திருவரங்குளம் கோவில் கோபுரம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

திருவரங்குளம் கோவில் கோபுரம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி


ADDED : ஆக 27, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், வைகாசி விசாகம், ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

வைகாசி விசாகம், ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில், ஜாதி பேதமற்ற முறையில் பட்டியல் இன மக்கள் முறைப்படி, அவர்கள் சாமி ஆடி வந்து, சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, தேரை அவர்கள் தான் முதலில் வடம் பிடித்து இழுத்து வைப்பர் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், 1984 மற்றும் 2011ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், இடிந்த நிலையில் இருப்பதால், கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் பெயர்ந்து கீழே விழ வாய்ப்புள்ளது.

ராஜகோபுரம் மேல் பகுதியில் இடிந்துள்ளதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே கோவில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us