sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

கருகிய நெல் பயிருடன் விவசாயிகள் போராட்டம்

/

கருகிய நெல் பயிருடன் விவசாயிகள் போராட்டம்

கருகிய நெல் பயிருடன் விவசாயிகள் போராட்டம்

கருகிய நெல் பயிருடன் விவசாயிகள் போராட்டம்


ADDED : மார் 28, 2024 11:27 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மறவனுாரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50, விவசாயி.

இவர், தன் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், விராலிமலையில் உள்ள ஒரு தனியார் கடையில், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி நெற்பயிர்களுக்கு தெளித்தார்.

ஓரிரு நாட்களில், அவரது 9 ஏக்கர் நெற்பயிர்களும் கருகின. பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை ஆய்வு செய்த போது, காலாவதியான மருந்து என்பது தெரிந்தது.

இது தொடர்பாக, செந்தில்குமார் திருச்சி மற்றும் புதுக்கோட்டை கலெக்டர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கூடினர். கருகிய நெற்பயிர்களை சாலையில் கொட்டி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதால், போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us