sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

வேங்கைவயல் மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி

/

வேங்கைவயல் மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி

வேங்கைவயல் மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி

வேங்கைவயல் மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி


ADDED : பிப் 01, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சில மாதங்களாக கிராமத்திற்குள் வெளியூரில் இருந்து ஆட்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், முரளிராஜா பாட்டி கருப்பாயி, 85, வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இறப்புக்காக, வெளியூர் ஆட்கள் கிராமத்திற்குள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் அக்கட்சியினர் மூதாட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல, பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us