sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் முகமூடி கொள்ளை

/

பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் முகமூடி கொள்ளை

பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் முகமூடி கொள்ளை

பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் முகமூடி கொள்ளை


ADDED : நவ 09, 2024 10:59 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வசிப்பவர் அய்யப்பன், 35; சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி தங்கலட்சுமி, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை, முகமூடி அணிந்த திருடர்கள் அய்யப்பன் வீட்டின் முன் கதவை உடைத்து, உள்ளே துாங்கிக் கொண்டிருந்த தங்கலட்சுமி, மாமியார் பாக்கியசெல்வி, 57, ஆகியோரை கத்தியை காட்டி, இருவர் கை, வாயை கட்டி போட்டு, 'பீரோ சாவியை கொடு; குழந்தைகளை கொன்று விடுவேன்' என, மிரட்டியுள்ளனர்.

பீரோ சாவியை கைப்பற்றி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

அய்யப்பனின் சகோதரர் சுரேஷ், நேற்று காலை அய்யப்பன் வீட்டிற்கு சென்ற போது, தங்கலட்சுமி, பாக்கியசெல்வி கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us