sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி

/

டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி

டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி

டிரான்ஸ்பார்மர் திருட்டு மின் வாரியம் அதிர்ச்சி


ADDED : மார் 30, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடி சென்றதால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் இருந்து கீரனுார் செல்லும் சாலையில், டிரான்ஸ்பார்மர் உள்ளது.

இங்கிருந்து, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நேற்று காலை அவ்வழியாக, பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் சென்றபோது, டிரான்ஸ்பார்மர் திருடப்பட்டு, உதிரி பாகங்கள் கீழே கிடந்துள்ளன.

இதனால், அதிர்ச்சியடைந்த மின்வாரிய ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி, மின்வாரிய அதிகாரிகளும், ஆதனக்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மாவட்டம் முழுதும் பல மாதங்களாக, மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள், ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வது, மின்வாரிய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us