sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

 தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்

/

 தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்

 தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்

 தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்


ADDED : நவ 27, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூழையன்காட்டைச் சேர்ந்தவர் தினகரசாமி மகன் மணவழகன், 50.

இவர், தன் விவசாய தோட்டத்தில் உள்ள பயன்பாடாத கிணற்றை மூடுவதற்காக ஆலங்குடி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையை கொட்டுவதற்கு அனுமதித்துள்ளார்.

இந்த கழிவுகளால் தொற்று நோய் பரவி ஆடுகள் உயிரிழந்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். கூழையன்காட்டை சேர்ந்த தர்மராஜ் மனைவி வள்ளி, 48, என்பவரின் ஆடு நேற்று உயிரிழந்தது. அந்த ஆட்டை, தாலுகா அலுவலக நுழைவாயிலில் போட்டு, அந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் கொட்டப்பட்ட கழிவுகளால், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை குடித்த ஆடு உயிரிழந்து விட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து, அங்கு வந்த தாசில்தார் வில்லியம்மோசஸ், அந்த பெண்ணுடன் பேச்சில் ஈடுபட்டார். சுகாதார துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். பின், அந்த ஆட்டை வள்ளி எடுத்துச்சென்றார்.






      Dinamalar
      Follow us