ADDED : மார் 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. சவுராஷ்டிரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உப தலைவர் மனோகரன், மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரெங்கன், கல்விக் குழு பொருளாளர் பரசுராமன், இளநிலைப் பள்ளி தாளாளர் மாருதிராம் முன்னிலை வகித்தனர்.
நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் தாரணி ஆண்டறிக்கை வாசித்தார். செயற்குழு உறுப்பினர் முரளீதரன் மாணவர்களின் ஊர்வலத்தை துவக்கினார். மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணை முதல்வர் ரேணுகாதேவி நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், கணேஷ் ஆனந்த், பெற்றோர் பங்கேற்றனர்.