sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்

/

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்


ADDED : மே 09, 2024 05:14 AM

Google News

ADDED : மே 09, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் நிலையில் கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .

செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்தியனேந்தல், தட்டானேந்தல், ஆனைசேரி, கீரனுார், செல்வநாயகபுரம் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 420க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லெட்சுமணன் கூறியதாவது: செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தொடர்ந்து அரசுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லை. பள்ளிக்கு தனியாக பாதை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கு தேவையான வகுப்பறை, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us