sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை: மூவருக்கு சிறை *இலங்கை நீதிமன்றம் உத்தரவு

/

தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை: மூவருக்கு சிறை *இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை: மூவருக்கு சிறை *இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை: மூவருக்கு சிறை *இலங்கை நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூலை 31, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:- இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மூவருக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 1ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தொண்டியில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று 25 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதில் ஒரு நாட்டுப்படகில் பதிவு எண் இல்லாமலும், 17 வயது மீனவ சிறுவன் கைதாகி இருந்ததால் சிறுவன் உட்பட 8 பேரை ஆக.8ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், மீதமுள்ள 17 பேரில் 14 பேரை விடுதலை செய்தும், மற்ற மூவரில் அந்தோணி லுாகாஸ் 2வது முறையாக மீன்பிடிக்க வந்து கைதானதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனையும், படகு உரிமையாளர்கள் பெரியசாமி, இருதயராஜ் கைதாகி உள்ளதால் இருவருக்கும் தலா ரூ. 40 லட்சம் அபராதமும் கட்ட தவறினால் தலா 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 22 பேருக்கு ஆக.8 வரை சிறை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us