/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்'
/
'5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்'
ADDED : பிப் 26, 2025 02:25 AM
ராமநாதபுரம்:''விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் ''என விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மகேஸ்வரன் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:
விஸ்வகர்மா சமுதாயத்தினர் கைத்தொழில்களை செய்து வருகின்றனர். நவீன கருவிகள் வருகையால் தொழில் ரீதியாகவும், பொருளாதாரத்திலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு ஜாதி சான்றிதழை ஹிந்து விஸ்வகர்மா என்றே அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விஸ்வகர்மா ஜெயந்தி விழாவான செப்., 17 ல் அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார்.