sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்

/

திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்

திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்

திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்


ADDED : ஆக 05, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதார் அடையாள அட்டை அத்தியாசிய தேவைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் அஞ்சலகங்கள் தோறும் ஆதார் பதிவு துவங்கப்பட்டது.

ரூ.50 கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் பிழைகள் திருத்தம் செய்யும் வசதியும் உண்டு.

ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். திருவாடானையை தலைமையிடமாக கொண்டு 59 கிராமப்புற தபால் நிலையங்களும், 19 துணை தபால் நிலையங்களும் உள்ளன.

இதில் சின்னக்கீரமங்கலம், மங்களக்குடி ஆகிய தபால் நிலையங்களில் மட்டுமே இச்சேவை உள்ளது. திருவாடானையில் ஆதார் பதிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூறுகையில், அரசு வழங்கும் சலுகை, நலத்திட்டங்கள், திருமணப்பதிவு, வீடு, நிலம், வாகனங்கள் வாங்க, விற்க என அனைத்து சேவைக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாலுகா தலைமையிடமான திருவாடானை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு சேவை முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us