ADDED : ஆக 28, 2024 04:06 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு அபிமன்யு பிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணா கோட்டை, சுபத்திரை கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவில் செங்கமடை கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக அபிமன்யு பிறப்பு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தார் சார்பில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அபிமன்யு பிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30ல் நடக்கிறது. செப்.1 ல் மஞ்சள் நீராடுதல் விழாவும், செப்.3ல் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.