/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி; ஏப்.10க்கு வழக்கு தள்ளி வைப்பு
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி; ஏப்.10க்கு வழக்கு தள்ளி வைப்பு
நடிகர் சீனிவாசன் செக் மோசடி; ஏப்.10க்கு வழக்கு தள்ளி வைப்பு
நடிகர் சீனிவாசன் செக் மோசடி; ஏப்.10க்கு வழக்கு தள்ளி வைப்பு
ADDED : ஏப் 03, 2024 07:26 AM

ராமநாதபுரம்: செக் மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.10க்கு தள்ளி வைத்தார்.
தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 55. இவர் வங்கி கடன் பெறுவதற்காக நடிகர் சீனிவாசனிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
கடன் பெற்றுத்தரவில்லை. கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார்.
சீனிவாசன் 14 லட்சம் ரூபாய்க்கு வங்கி காகோசலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் கசோலை திரும்பியது.
ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முனியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் சீனிவாசன் நேற்று ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.10க்கு நடிகர் சீனிவாசன் தரப்பு சாட்சிகள் விசாரணைக்காக தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

