sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

/

பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

5


ADDED : நவ 20, 2025 06:52 PM

Google News

5

ADDED : நவ 20, 2025 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் புலனாய்வு படையினர், காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் ஜம்மு அலுவலகத்தை சோதனை செய்து, ஏகே ரக ரைபிள் தோட்டாக்கள், கைத்துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் அலுவலகத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் மாநில புலனாய்வு அமைப்பு திடீரென சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், ஏகே ரக ரைபிள் தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகளில் பயன்படும் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுளுக்கான லிவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கணினிகள் உட்பட வளாகத்தை சிறப்பு புலனாய்வு குழுக்கள் முழுமையாக சோதனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1954ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் நிறுவப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், நீண்ட காலமாக பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. ஜம்மு பிரஸ் கிளப்பின் தலைவராகவும் பணியாற்றிய வேத் பாசின் சமீபத்திய ஆண்டுகளில் காலமானார்.

அதன் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால், அவரது கணவர் பிரபோத் ஜாம்வாலுடன் சேர்ந்து நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஜம்வால் தற்போது வெளிநாட்டில் உள்ளனர். இந்த செய்தித்தாள் 2021-22ம் ஆண்டு முதல் ஜம்முவிலிருந்து அதன் அச்சுப் பதிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் அதன் ஆன்லைன் பதிப்பு செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் இந்த சோதனைக்கு பிரிவினைவாத ஆதரவு தலைவரான மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us