/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீர்மரபினர் நல வாரியத்தில்உறுப்பினராக விண்ணப்பம்
/
சீர்மரபினர் நல வாரியத்தில்உறுப்பினராக விண்ணப்பம்
ADDED : ஜூன் 21, 2024 04:11 AM
ராமநாதபுரம்: சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும்.
2008 முதல் சீர்மரபினர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 முதல் 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, உறுப்பினராக பதிவு செய்தோர் தங்கள் உறுப்பினர் பதிவை விரைவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.