ADDED : செப் 14, 2024 11:53 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி : பரமக்குடி சொர்ணா கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
சொர்ணா நர்சிங் மற்றும் தொழிற் பயிற்சி கல்லுாரி தாளாளர் ஜெபின் ஜோசப் தலைமை வகித்தார்.
மாணவிகள் கல்லுாரி வாசலில் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். பின்னர் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர். இதில் ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
