ADDED : செப் 16, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே சோழகன்பேட்டை ஆட்டோ டிரைவர் சதிஷ்குமார் 37. செப்.13 ல் புதுக்கோட்டை மாவட்டம் ஏனாதி அருகே ஆட்டோ ஓட்டி சென்ற போது ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த சதிஷ்குமார், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த சதிஷ்குமார் நேற்று முன்தினம் இறந்தார். எஸ்.பி. பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

