/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் சதுர்த்தியில் பால்குடம் ஊர்வலம்
/
விநாயகர் சதுர்த்தியில் பால்குடம் ஊர்வலம்
ADDED : செப் 08, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாக மண்டகப்படி சென்று அங்கிருந்து அரோகரா கோஷங்களுடன் பால்குடம்எடுத்து வந்தனர். அதன் பிறகு விநாயகருக்கு பாலபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தாய் வீடு ஆத்ம சாந்தி நிலையம் சார்பில் ஆன்மிக பிரமுகர்கள் பங்கேற்ற சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.