ADDED : ஆக 25, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பாரதிநகர் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாளை முன்னிட்டு, மாறுவேடம், கட்டுரை, பேச்சு, பாரதியாரின் பாடல்கள், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வென்றவர்களுக்கு பரிசு செப்., 15ல் ராமநாதபுரம் அரவிந்தர் அரங்கத்தில் பாரதியார் தினவிழாவில் வழங்கப்பட உள்ளது.
கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன், தமிழ் சங்க தலைவர் அப்துல் சலாம், செயலர் டாக்டர் சந்திரசேகர், ஆசிரியர்கள் அன்சாரி, மணிவண்ணன், உலகராஜ், கவிஞர் கு.ரா மற்றும் சுகன்யா தேவி பங்கேற்றனர்.

