/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'இண்டியா' கூட்டணி ஆட்சி வந்தால் படகுகள் சிறை பிடிக்கப்படாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி
/
'இண்டியா' கூட்டணி ஆட்சி வந்தால் படகுகள் சிறை பிடிக்கப்படாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி
'இண்டியா' கூட்டணி ஆட்சி வந்தால் படகுகள் சிறை பிடிக்கப்படாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி
'இண்டியா' கூட்டணி ஆட்சி வந்தால் படகுகள் சிறை பிடிக்கப்படாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி
ADDED : ஏப் 08, 2024 11:54 PM
ராமேஸ்வரம் : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடிக்காது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார்.
நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களிடம் ஓட்டு சேகரித்த போது பேசியதாவது: இலங்கையில் சேதமடைந்துள்ள தமிழக மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.5 கோடி அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு தராவிட்டாலும் நானும், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா ஆகியோர் மடிப்பிச்சை ஏந்தி வசூலித்து கொடுப்போம்.
இலங்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகை சிறை பிடிக்க மாட்டார்கள்.
மேலும் கைதாகும் மீனவர்களுடன் படகுகளும் விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

