/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்
/
குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்
ADDED : ஜூலை 21, 2024 04:39 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி ரோட்டில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு முதுகுளத்துார்--கமுதி செல்லும் ரோட்டில் சித்திரங்குடி விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது.
கிராமத்திற்கு ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குடிநீர் கால்வாய், விவசாய நிலங்களில் தேங்கியுள்ளது.
இதனால் எந்த பயனும் இல்லை. குழாய் உடைப்பால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சேதமடைந்துள்ள காவிரி குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.